பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
10:07
திருப்பூர்: திருப்பூர்,செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் நகரின் காவல் தெய்வமான, ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா, நடந்து வருகிறது. விழாவில், ஜூலை 19ல் முனியப்பன் கோவில் இருந்து, சூலம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், சூலம் எடுத்து வந்து, வழிபாடு நடத்தினர். அகிலாண்டேஸ்வரி, மதுரை மீனாட்சி, சமயபுரம் மாரியம்மன், அங்காளம்மன், சவுடேஸ்வரி அம்மன் என, தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான இன்று குண்டம் இறங்குதல் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.