தலைவாசல்: தலைவாசல், வரகூரில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு புதியதாக ராஜகோபுரம் கட்டுவதற்கு, முடிவு செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கோபுரம் கட்டவும், ஆடி, 18க்கு மறு நாள், பணிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. கோவில், ஊர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஸ்தபதிகள் கலந்து கொண்டனர்.