கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் காணிக்கை உண்டியல் மூலமாக 7 லட்சத்து 65 ஆயிரத்து 495 ரூபாய் வசூல் கிடைத்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவில் உண்டியல் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் 30 பேர் ஈடுபட்டனர். அதில், 7 லட்சத்து 65 ஆயிரத்து 495 ரூபாய் ரொக்கம், 48 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் ஆய்வாளர் சுபத்ரா, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.