ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். பேரூர் பட்டீஸ்வரன் கோவில் உதவி ஆணையர் சரவணன் மற்றும் பொள்ளாச்சி ஆய்வர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன், திருக்கோவில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கோவிலிலுள்ள, நிரந்தர உண்டியல்களில், 38 லட்சத்து, 35 ஆயிரத்து, 292 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 492 ரூபாயும் இருந்தது. மேலும், 211 கிராம் தங்கம் மற்றும், 458 கிராம் வெள்ளி இருந்தது.