திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு 10ம் ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலை 4.15 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது. மாலை 7 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங் காரம் செய்வித்தனர். பின்னர் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும், தீபா ராதனையும் நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கலைவாணன், குருக்கள் ரவி மற்றும் திருஅருட்டுறைநாதன் அருட்சபையினர் செய்திருந்தனர்.