தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. சுவாமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. மலர் அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் ஆகியன நடந்தன. முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.