சாயல்குடி சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2018 12:08
சாயல்குடி: சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா ஜூலை 27ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் (ஜூலை 31)ல் மாலை விளக்கு பூஜை நடந்தது. நாளை (ஆகஸ்ட் 3)ல் காலை 7:00 மணியளவில் பூக்குழி உற்சவமும், பால்குட அபிஷேகமும் நடக்க உள்ளன. ஏற்பாடுகளை வணிக வைசிய உறவின் முறையாளர்கள் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.