பதிவு செய்த நாள்
02
ஆக
2018
12:08
ஊட்டி: ஊட்டி நகர சேவா பாரதி அமைப்பு சார்பில், சீனிவாச பெருமாள் முன்மண்டபத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள, கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் திருப்பணி நடந்து வரும் நிலையில், ஊட்டி நகர சேவா பாரதி அமைப்பு சார்பில், ஆடி மாத சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மூலிகை தீர்த்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள், சீனிவாச பெருமாள் கோவில் முன் மண்டபத்தில், அம்மனுக்கு அபிஷேக பூஜை நடத்தினர். பின்பு, கோவில் நிர்வாகி சிவதாஸ் முன்னிலையில், பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. சேவா பாரதி மாவட்ட செயலாளர் உமா மகஷே்வரி தலைமையில், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் மணிகண்டன் உட்பட, திரளானோர் பங்கேற்றனர்.