பதிவு செய்த நாள்
03
ஆக
2018
11:08
சூலுார்: கண்ணம்பாளையம் அரசடி விநாயகர் கோவில், மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்குள்ள புதிய உற்சவருக்கு கும்பாபிஷேகம், திருக்கல்யாணம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த , 29ல் எல்லை காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 6:00க்கு விநாயகர் பூஜையுடன், உற்சவர் கும்பாபிஷேகவிழா துவங்கியது. இரண்டு கால ேஹாமங்கள் நிறைவுற்று, நேற்று காலை , 9:00க்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உற்சவ அம்பாளுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. வேணுகோபாலசுவாமி கோவிலில் இருந்து, மாகாளியம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வரப்பட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை , 7:00க்கு அரசடி விநாயகர், பழனியாண்டவர் மற்றும் மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாலை , 3:00க்கு அம்மன் தேர் வீதியுலா நடக்கின்றன.