ஆடிப்பெருக்கு விழா: ஆற்றுப்பகுதியில் குழந்தைகள் கவனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2018 12:08
கரூர்: காவிரி ஆற்றில், ஆடிப் பெருக்கு விழா கொண்டாடும் போது, குழந்தைகள் மீது கவனமாக இருக்க வேண்டும் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளிலுள்ள பொதுமக்கள், இன்று ஆடிப்பெருக்கு விழாவை பாதுகாப்போடு கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடும்போது தங்கள் குழந்தைகள் மீது அதிக கண்காணிப்பு செலுத்த வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம். ஆற்றுக்குள் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். படித்துறைகளில் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம், புதைகுழி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உதவிக்கு தீயணைப்பு துறையினர், நீச்சல் தெரிந்த வீரர்கள் தயாராக இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தகவல் பெற, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.