Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு ... ராமாயண காவிய யாத்திரை ரயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு உற்சாகம் களை கட்டிய கிராமங்கள்
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு உற்சாகம் களை கட்டிய கிராமங்கள்

பதிவு செய்த நாள்

04 ஆக
2018
12:08

உடுமலை:வேளாண்மை செழிக்க உதவும் நீர் நிலைகளுக்கு நன்றி சொல்லும், ஆடி 18 கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதைக்க, விவசாயிகள் இருப்பு வைத்திருந்த விதைகளில், முளைப்பாரிகள் இட்டு, விரதம் துவங்கினர். ஆடிப்பெருக்கு தினமான நேற்று, முளைப்பாரிகளை எடுத்து வந்து, அமராவதி ஆற்றின் கரையோரத்திலுள்ள கிராமங்களில் கொண்டாடப்பட்டது. முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, ஆற்றின் படித்துறைகளில் வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, விவசாயம் செழிக்க வழிபட்டனர். ஆடிப்பெருக்கு அன்று, கணவர் ஆயுள் பெருக, பெண் தெய்வங்களை வணங்கி, பெண்கள் தாலி மாற்றினர். கன்னி பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக, நீரில் விளையாடியும், பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடியும், ஒற்றுமைத் திருவிழாவாக நேற்று கொண்டாடினர். ஆடிக்காற்றை கொண்டாடும் வகையில், கிராமங்களிலுள்ள மரங்களில் துாரிகள் அமைத்து, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடினர். உடுமலை அருகேயுள்ள ஆண்டாள் நாச்சியார் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆண்டாள் அருள்பாலித்தார்.பூமிலட்சுமி அம்மனுக்கும் அபிேஷக, ஆராதனை நடைபெற்றது. நேருவீதி காமாட்சியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது. மாரியம்மன் கோவில் மற்றும் பிரசன்ன விநாயகர் கோவில்களில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடிவெள்ளி சிறப்பு அபிேஷகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar