திண்டிவனம்: தீர்த்தக்குளம் பாலமுருகன் திருக்கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தேர்த் திருவிழா நடந்தது. திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காப்பு கட்டுதல், பால்குட ஊர்வலம் நடந்தது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் நல்லாவூர் புதூர் ஏழுமலை சாமியால் சக்திவேல் பூஜை காவடி அபிஷேகமும், மிளகாய் பொடி அபிஷேகமும் நடந்தது.இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு தீமித்திருவிழாவும், தேர் திருவிழாவும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தீமித்து நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.