தாம்பரம்: மேற்கு தாம்பரம் முத்துரங்கன் பூங்காவளாகத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் கோயிலில் 45 வது ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.