தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த லளிகம், குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஆடி செவ்வாயை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. அம்மன் சிவசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.