சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், ஏராளமானோர் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைக்கும் விழா நடந்தது. ஏராளமானோர், குடும்பத்துடன் வந்து, பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடும் நடைபெற்றது. உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.