நெட்டப்பாக்கம்: மடுகரை வேட்டைக்காரன் அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் வேட்டைக்காரன் அய்யனாரப்பன் கோவில் புதியதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, காலை 8.00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடத்தப்பட்டு, காலை 10.00 மணிக்கு மூலவருக்கு கலச நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.