ராமேஸ்வரம், ஆடித்திருக்கல்யாண விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் தங்கபல்லக்கில் வீதி உலா வந்தார். ராமேஸ்வரம் கோயிலில் ஆக.,4ல் கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து 17 நாட்கள் விழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான நேற்று, கோயிலில் இருந்து தங்கபல்லக்கில் பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி நான்கு ரதவீதியில் வீதி உலா வந்தார். ஆடி அமாவாசையான ஆக.11ல் கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ஸ்ரீராமர் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும்,அங்கு கூடியிருக்கும் பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.