பதிவு செய்த நாள்
10
ஆக
2018
11:08
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று, சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தன. தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, மாலை, 4:30 மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, நந்திக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, அலங்கார ஆராதனை நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது.