பதிவு செய்த நாள்
10
ஆக
2018
12:08
மதுரை: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பெண்கள் கூட்டம் அலைமோதியது. பாரியூரில் பிரசித்தி பெற்றது கொண்டத்து காளியம்மன் கோவில். ஆடி வெள்ளியை முன்னிட்டு, காலை முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். காலை, 7 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆடி கடைசி வெள்ளிகிழமையையொட்டி உடுமலை மாரியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்ச்சியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். உடுமலை தளி ரோடு காமாட்ச்சியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
கோவை செல்வபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியையொட்டி கனி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல், கோவை லாலி ரோடு பெரிய மாரியம்மன், கோவை ராயப்பபுரம் தண்டுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புதுச்சேரி ஐயங்குட்டிப்பாளையம் சிவசக்தி நகர் சுயம்பு லிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.