பதிவு செய்த நாள்
10
ஆக
2018
01:08
அவிநாசி: கருவலுார் மாரியம்மன் கோவிலில், லட்சார்ச்சனை பெருவிழா, நேற்று துவங்கியது. அவிநாசி அருகே கருவலுார் மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காலை, மாரியம்மனுக்கு அலங்கார பூஜையுடன், லட்சார்ச்சனை விழா துவங்கியது. அதன்பின், கணபதி ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. நேற்று, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புன்யாகவாசத்துடன், லட்சார்ச்சனை துவங்கியது. விழாவில், இன்று, காலை, 8:45 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, மாரியம்மனுக்கு ேஹாம பூஜை உட்பட சிறப்பு பூஜையுடன், லட்ச்சார்ச்சனை நிறைவு பெற உள்ளது. மதியம், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, மாரியம்மன் கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.