பதிவு செய்த நாள்
10
ஆக
2018
01:08
திண்டிவனம்: ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலின் மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடந்தது. திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோவின் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நடந்தது. இதன் தொடர்ச்சியாக 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து, மண்டல அபிஷேக பூர்த்தி விழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான் சங்கல்பம்,புண்யாஹவாசனம், 108 வலம்புரி சங்கு ஸ்தாபனம், 108 கலச ஸ்தாபனம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக முதல் காலஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமும், 9:00 மணிக்கு மகா அபிஷேகமும், மகா பூர்ணாஹூதியும், முத்தாலம்மனுக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 12:00 மணிக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு முத்தாலம்மன் மின்விளக்கு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டார்கள், கிராம பொது மக்கள், நாட்டாமைதாரர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.