வழுதாவூர்: நெற்குணம் ராமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. வழுதாவூர் அடுத்த நெற்குணம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆனந்த விநாயகர், ராமேஸ்வரர், பால முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ராமேஸ்வரர், விநாயகர், பாலமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நெற்குணம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், வழுதாவூர் கயிலாயநாதர் கோவில், திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.