பதிவு செய்த நாள்
12
ஆக
2018
12:08
ராமேஸ்வரம்:ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
தமிழகம் முழுவதும் இருந்து, பக்தர்கள் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம், தில பூஜை செய்து வழிபட்டனர். கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில், ஸ்ரீராமர் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:30 மணிக்கு ராமர், பக்தருக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சியை குருக்கள் நடத்தினர். நேற்று அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில் நீராடினர். கோவிலில் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் கோவிலின் நான்கு ரதவீதிகளிலும், நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.