பதிவு செய்த நாள்
12
ஆக
2018
01:08
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி:முத்து மாரியம்மன் கோவிலில், இன்று ஆடித் திருவிழா நடைபெறுகிறது. கூடுவாஞ்சேரி, ரயில்வே காலனி, என்.ஜி.ஓ., நகரில், மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த வளாகத்தில், முத்துமாரியம்மன் சன்னதி உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், அம்மனுக்கு ஆடித் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு, ஆடித் திருவிழாவை யொட்டி, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை, 11:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகமும், மஹா தீபாராதனையும், அம்மன் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. திருவடிப்பூர திரு விளக்கு பூஜை, 13ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் சீனுவாசன், தலைமை அர்ச்சகர் முத்துகுமார் உட்பட, பலர் செய்து வருகின்றனர்.