பதிவு செய்த நாள்
13
ஆக
2018
11:08
சாலவாக்கம்: கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு, கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த கிளக்காடி கிராமத்தில், கன்னியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் விழா, 8ம் தேதி, கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் குவிந்த பெண்கள், ஊரணி பொங்கலிட்டு, அம்மனுக்கு படையலிட்டனர். பெண் பக்தர்கள், வேப்பிலை ஆடை அணிந்தும், அம்மனுக்கு விரத மிருந்த பக்தர்கள், உடலில் அலகு குத்தியும், முதுகில் முள் போட்டு அந்தரத்தில் தொங்கியும், நேர்த்தி கடன் செலுத்தினர். மாலை, 6:00 மணிக்கு, கோவிலுக்கு அருகே அமைத்திருந்த தீக்குண்டத்தில் இறங்கி, பக்தர்கள் தீமிதித்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபட்டனர்.