திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ அங்காளம்மனுக்கு பக்தர்கள், 108 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். ஆடி அமாவாசையை முன்னிட்டு‚ கீழையூர் அங்காளம்மன் கோவிலில்‚ சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:30 மணிக்கு ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து‚ ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு பால்குட சிறப்பு அபிஷேகம், அலங்காரம், 12:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.