வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2018 12:08
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேல்மலையனுார் தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் 101 வது மாதமாக கடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் விநாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடந்து. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சள் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர்புண்ணியமூர்த்தி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.