பதிவு செய்த நாள்
13
ஆக
2018
01:08
நாமக்கல்: என்.கொசவம்பட்டி, கவரா நகர், மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக துவங்கியது. நாமக்கல் அடுத்த, என்.கொசவம்பட்டி கவரா நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து, காவிரி தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பகல், 2:00 மணிக்கு புண்யாசனம் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு பிடாரி அம்மன் கோவிலில் பொங்கல் படைத்து பூஜை, இரவு, 8:00 மணிக்கு கம்பம் நட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. வரும், 19 மாலை, 6:30 மணிக்கு சக்தி அழைத்தல், அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி எதிர்சேவை சக்தி ஏற்றுக்கொள்ளுதல் நடக்கிறது. மறுநாள் அதிகாலை, 1:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் ஊர்வலம், 4:00 மணிக்கு அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பூ மிதித்தல், அங்கப்பிரதட்சணம் ஆகியவை நடக்கிறது. வரும், 21 காலை, 8:30 மணிக்கு அம்மன் திருத்தேர் பவனி, 10:30 மணிக்கு கிடா வெட்டுதல், மாலை, 6:00 மணிக்கு கிராம பூஜையுடன் கம்பம் எடுத்து கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 22 இரவு, 7:30 மணிக்கு அம்மன்
ஊஞ்சலில் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.