பதிவு செய்த நாள்
13
ஆக
2018
01:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலில் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலில், தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு கிரிவலம் செல்வர்.இதில், வார விடுமுறை நாட்கள், மற்றும் தொடர் அரசு விடுமுறை நாட்களில் வழக்கமாக வரும் பக்தர்கள் கூட்டத்தை விட அதிகமாக வருவர். இந்நிலையில், கருணாநிதி இறப்பு, ஆடி மாதங்களில், அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதாலும், நேற்று வார விடுமுறை தினமான, ஞாயிற்று கிழமையில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.