பதிவு செய்த நாள்
13
ஆக
2018
01:08
ராமேஸ்வரம்: ஆகம விதிகளை மீறி அக்னி தீர்த்தத்தில் இரவில் பிண்ட பூஜை நடத்தியதற்கு, இந்து அமைப்பினர்எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆக.,10 மாலை 6:48 முதல் மறுநாள் மாலை 4:22 வரை ஆடி அமாவாசை இருந்ததால், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு ஆக.10ம் தேதி இரவு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.ஆக.,10 இரவு 7:00 மணி முதல் அக்னிதீர்த்த கடற்கரையில்அமர்ந்திருந்த வெளியூர் புரோகிதர்கள் தர்ப்பணம், சங்கல்பம், பிண்ட பூஜை நடத்தி, பக்தரிடம் நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலித்தனர்.ஆகம விதியை மீறி இரவில் (சூரியன் அஸ்தமனத்திற்கு பின்) செய்த பூஜையால் பக்தருக்கு பலன் இல்லை.பக்தர்களை ஏமாற்றி இரவில் பூஜை நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.மாநில வி.எச்.பி., கோயில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பக்ஷி.சிவராஜன் கூறுகையில்: சூரியன் அஸ்தமனத்திற்கு பின் இரவில் பூஜைசெய்தது ஆகம விதிக்கு முரணானது.இப்பூஜையால்பக்தருக்கு பலன் கிடைக்காது, பக்தரிடம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்ட வெளியூர் புரோகிதர்கள் மீதுஅக்னி தீர்த்த புரோகிதர் சங்க நிர்வாகிகள், அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்,என்றார்.