சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, வரும், 15ம் தேதி, 449 கோவில்களில் பொது விருந்து நடத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டத்தின்படி, சுதந்திர தினத்தில், கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வரும், 15ல், மாநிலம் முழுவதும், 449 கோவில்களில் பொது விருந்து மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.