பதிவு செய்த நாள்
14
ஆக
2018
10:08
சபரிமலை: நிறை புத்தரிசி பூஜைக்காக, சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. பம்பை ஆறு கரைபுரண்டு ஓடுவதால், பக்தர்கள் வர வேண்டாம் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை நடை, இன்று மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை காலை, 6:00 - 6:30 மணிக்குள், நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது.மழை காரணமாக, பம்பை கரைபுரண்டு ஓடுகிறது. பக்தர்கள், பம்பையில் கடக்கும் இரண்டு பாலங்களும், தண்ணீரில் மூழ்கியுள்ளன. பம்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தேவஸ்தான மண்டபங்கள், தண்ணீரில் மூழ்கியுள்ளன.எனவே, பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டாம் என்றும், மீறி வருவோர், நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவர் என்றும், தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.பக்தர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், சன்னிதானத்தில் நிறைபுத்தரிசி பூஜை வழக்கம் போல் நடைபெறும்.