பதிவு செய்த நாள்
14
ஆக
2018
12:08
சேலம்: சேலத்திலிருந்து, மூன்று டன் சாமந்தி பூக்கள், திருமலைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதியிலுள்ள திருமலையில் வரும், 16 வரை கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதற்காக பூக்களை அனுப்ப, சேலம் ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மஞ்சள் சாமந்தி, ஒன்றரை டன், ஆரஞ்சு சாமந்தி ஒன்றரை டன் என மொத்தமாக, மூன்று டன் பூக்கள் தொடுக்கப்பட்டன. 500 க்கும் மேற்பட்ட பெண்கள், பூக்களை மாலைகளாக தொடுத்தனர். பின்னர் அனைத்து பூக்களும் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், திருமாங்கல்யம் ஆகியவை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சபா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் செய்திருந்தார்.