பதிவு செய்த நாள்
14
ஆக
2018
12:08
பழநி: பழநி முருகன் கோவில், ரோப்காரில், மேற்கு வங்கம், கோல்கட்டாவில், இருந்து வந்த புதிய கம்பிவடம் பொருத்தும் பணி நடக்கிறது; விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பழநி முருகன் கோவில், ரோப்கார் மாதத்தில் ஒரு நாளும், ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஒருமாதமும் நிறுத்தப்படும். இவ்வாண்டு பராமரிப்பு பணிக்காக, ஜூலை, 12 முதல், ரோப்கார் நிறுத்தப்பட்டு கம்பிவடம், உருளைகள், பெட்டிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.கோல்கட்டாவில் இருந்து கம்பிவடம் மற்றும் கரூரில் வடிவமைக்கப்பட்ட புதிய பெட்டிகள் வந்துள்ளன. கோல்கட்டாவில் இருந்து வந்துள்ள புதிய, ஷாப்ட்டை மேல்தளத்தில் பொருத்தி, புதிய கம்பிவடத்தை இணைக்கும் பணி நடக்கிறது.பணி முடிந்த பின், வடத்தில் பெட்டிகளை பொருத்தி, எடை வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும். ரோப்கார் கமிட்டி ஆய்வு செய்து, பாதுகாப்பு உறுதி சான்றிதழ் வழங்கியபின், ஒருவாரத்தில் ரோப்கார் பயன்பாட்டிற்கு வரும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.