திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது.ஆண்டாள் அவதரித்த ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, கோயிலில் தனி சன்னதியாக உள்ள மூலவர் ஆண்டாளுக்குவிசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி, பாராயணம் உள்ளிட்டவை நடந்தது. கோயில் பட்டாச் சாரியார்களால் நாலாயிர திவ்யபிரபந்தப்பாடல்கள், திருப்பாவை உள்ளிட்டவை பாடப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.