மயிலம்: மயிலம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தில் பகவதியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. கீழ்எடையாளம் மலையில் அமைந்துள்ள பகவதியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 11:30 மணிக்கு அம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலை அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இரவு 7:00 மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலகாட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை குருக்கள் முனுசாமி அடிகளார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.