பதிவு செய்த நாள்
16
ஆக
2018
11:08
சிதம்பரம்: சுதந்திர தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில், கிழக்கு கோபுரத்தில் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. கடலுார் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், 72வது சுதந்திர தினத்தையொட்டி, சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பொது தீட்சிதர்கள் நடராஜர் சன்னதி சித்சபையில் தேசிய கொடிக்கு சிறப்பு பூஜை செய்து, வெள்ளித் தட்டில் வைத்து மேள தாளங்கள் முழங்க கிழக்கு கோபுரத்திற்கு எடுத்து வந்தனர். கோபுரத்திற்கு தீபாராதனை நடைபெற்று, கோபுரம் உச்சியில் தேசிய கொடியை ஏற்றி, பறக்கவிட்டனர். பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர். அதேபோல், கோவில் மேற்கு கோபுரத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வைக்கப்பட்ட கல்வெட்டுக்கு, மேல சன்னதி வியாபாரிகள் மலர் துாவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.