Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் தயார் நிலையில் ... பழநி 2 ரோப்காருக்கு பிரான்ஸ் இயந்திரங்கள், கம்பிவடம் பழநி 2 ரோப்காருக்கு பிரான்ஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் முன்னறிவிப்பின்றி அபிஷேக தரிசன கட்டணம் உயர்வு
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் முன்னறிவிப்பின்றி அபிஷேக தரிசன கட்டணம் உயர்வு

பதிவு செய்த நாள்

17 ஆக
2018
12:08

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேக தரிசன கட்டணம் எந்தவித முன் அறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும், ஒன்பது கால பூஜைகள் நடக்கிறது. இதில் காலை, 6:15 மணி, பகல், 10:30 மணி, இரவு, 7:00 மணி ஆகிய நேரங்களில் நடக்கும் அபிஷேகங்கள் முக்கியமானது. இந்த அபிஷேக நேரங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, இது வரை அபிஷேக தரிசன கட்டணமாக, 200 ரூபாயும், வி.ஐ.பி., தரிசன கட்டணமாக, 1000 ரூபாயும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென அபிஷேக தரிசன கட்டணம், 200 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாகவும், வி.ஐ.பி., தரிசன கட்டணம், 1,000 ரூபாயிலிருந்து, 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல் மாதந்தோறும் நடக்கும் வளர்பிறை சஷ்டி, கிருத்திகை மாதாந்திர வெள்ளி கிழமை ஆகிய நாட்களில் அபிஷேக தரிசன கட்டணங்கள், 2,000 ரூபாயும், வி.ஐ.பி. அபிஷேக தரிசனம் கட்டணம், 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து, எவ்வித முன் அறிவிப்பும் வெளியிடப்படாமல், திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு பலகைகள் கூட வைக்கப்படாமல், கட்டணம் செலுத்தச் செல்லும் போது, பக்தர்களிடம் சொல்லப்படுகிறது. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar