முத்துமாரியம்மன், கருப்பணசாமி கோயில் ஆடித்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2018 12:08
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு, தெற்கு தெரு, முத்துமாரியம்மன், கருப்பணசாமி கோயில் ஆடி முளைப்பாரி திருவிழா நடந்தது. முதல் நாள் வாண வேடிக்கையுடன் மஞ்சள் ஆற்றில் இருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. 2ம் நாள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 3ம் நாள் கோயில் பூஜாரி கல்யாணி தலைமையில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.