பதிவு செய்த நாள்
18
ஆக
2018
01:08
எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையம், ஆதிநாக அருளீஸ்வரர் கோவில் கண்திறப்பு விழா நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், மணலிஜேடர்பாளையத்தில் உள்ள விநாயகர், கருணாம்பிகை தாயார் சமேத ஆதிநாகஅருளீஸ்வரர் கோவிலில் நேற்று கண்திறப்பு விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், மகா சங்கல்பம், லலிதா சகஸ்ரநாம பாராயணம்; 8:00 மணிக்கு, கணபதி ?ஹாமம், நவக்கிரஹ ?ஹாமம், அஸ்திரஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை; 9:00 மணிக்கு அபி?ஷகம், கலச தீர்த்தாபி ?ஷகம், கண்திறப்பு, கோ பூஜை; மாலை, 4:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.