கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், சோமவார பூஜையையொட்டி, காலை 11.00 மணியளவில் 1008 லலிதா சகஸ்ரநாமம் பூஜையும், அதனைத்தொடர்ந்து உச்சிகாலபூஜையில், பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்தப் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத்,சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.