ராமேஸ்வரம்: ஆடித்திருக்கல்யாண 17ம் நாள் விழாவை யொட்டி நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா ஆக.4ல் கொடி ஏற்றத்துடன் துவங்கி, ஆக.11ல் ஆடித்திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 17ம் நாள் விழாவான நாளை கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகபடியில் எழுந்தருள உள்ளதால், அன்று காலை 8:00 மணி முதல் கோயில் நடை சாத்தப்படும். பின் அன்று இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும், நடை திறக்கப்பட்டு இரவு, அர்த்தமசாம பூஜை நடந்ததும், மீண்டும் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார்.