பதிவு செய்த நாள்
20
ஆக
2018
12:08
திருக்கழுக்குன்றம்: கோவில் சொத்துகளை கொள்ளை அடிப்பவருக்கு நீயே தண்டனை கொடு என்ற வாசகத்துடன், உண்டியலில் பக்தர்கள் மனு செலுத்தினர். தமிழகத்தில், அறநிலையத்துறை வசம் உள்ள கோவில்களில், சிலைகள் திருட்டு, கோவில் சொத்துகள் கொள்ளை, கோவில் குளங்கள் பராமரிப்பின்றி வீணாகுதல் போன்றவை நடக்கின்றன.கடந்த, 13ல், திருக்கழுக்குன்றம் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், பக்தர்கள் தங்கள் பெயர், மொபைல் எண், விலாசத்துடன், திருக்கழுக்குன்றம் ருத்திரகோட்டீஸ்வரருக்கு, நுாதன கோரிக்கை வைத்தனர்.கோவில் சொத்துகளை அபகரிப்பவர்களுக்கு நீயே தண்டனை கொடு என எழுதி, அந்த மனுவை உண்டியலில் செலுத்தினர்.நேற்று முன்தினம் இரவு, வேதகிரீஸ்வரர் தாழக்கோவிலில், அதே வாசகத்துடன் கூடிய மனுவை, அந்த அமைப்பினர், உண்டியலில் செலுத்தினர்.