விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்ஸவ விழா ஆக., 15ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா, மண்டப படிகளில் வழிபாடு நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று காலை 11:30 மணிக்கு நடந்தது. சுவாமி, மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அடுக்கு தீபாராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, குங்கும பிரசாதம் அளிக்கப்பட்டது. இன்று காலை 10 :00மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தக்கார் ஆவுடைம்மாள், நிர்வாக அதிகாரி சத்தியநாராயணன், நிர்வாக அறங்காவலர் ராமதாஸ் செய்தனர்.