பதிவு செய்த நாள்
24
ஆக
2018
12:08
பழநி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பழநியில் இந்துஅமைப்புகள் சார்பில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் செய்யும் பணி வேகமாக நடக்கிறது. பழநியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. இவ்வாண்டு செப்., 13ல் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விழுப்புரத்தில் இருந்து காகிதக்கூழ், மாவுப்பொருளில் செய்த, 300க்கும் மேற்பட்டவிநாயகர் சிலைகளின் பாகங்கள் தனித்தனியாக கொண்டுவரப்பட்டு அவற்றை ஒன்றாக இணைத்து வண்ணம் பூசும்பணி நடக்கிறது. வரும் செப்.,16ல் இந்து முன்னணி விநாயகர் ஊர்வலமும், செப்.,17ல் சிவசேனா, இந்துமக்கள் கட்சி விநாயகர் ஊர்வலமும் நடக்க உள்ளது. இதுகுறித்து சிவசேனா மாவட்ட தலைவர் கனிவளவன் கூறுகையில், 4அடி முதல் 11அடி வரை உயரமுள்ள 125 விநாயகர் சிலைகள் செய்கிறோம். செப்.,13ல் விநாயகர் சதுர்த்தி அன்று பழநி நகர், கிராமப்பகுதிகளில் பிரதிஷ்டை செய்து சிறப்புபூஜை செய்கிறோம். செப்., 17ல் பாதவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுசென்று சண்முகநதியில் கரைக்கப்படும் என்றார்.