காடுபட்டி, சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஆக.,14ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தன. முக்கிய நிகழ்வாக திருவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழாவையொட்டி பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.