Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலங்காநல்லுார் சிவன்கோயிலில் ... ஆவுடைபொய்கை ஜெய வீர ஹனுமன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2018
03:08

ஏற்காடு: ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டனர். கல்லுசிலைக்காடு வனப்பகுதியில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, இரண்டு நடுகற்களை கண்டுபிடித்தனர். இவை, சமூகத்தை காக்கும்பொருட்டோ, அரசனுக்காகவோ, பசுக்களை கவரவோ அல்லது மீட்கவோ வேண்டி, போரிடும்போது விழுப்புண்பட்டு மடியும் வீரனின் வீரத்தைபோற்றும் வகையில் நடப்படும் வீர நடுகற்கள்.

முதல் நடுகல்லில், வீரனின் இடதுகையில் வில்லேந்தி, வலது கையில் வாள் ஏந்தி, தலைமுடி உச்சிமேல் முடிந்து, இடுப்பில் அரையாடை அணிந்தபடி, போர் புரியும் நிலையிலுள்ளது. இது, போரில் எதிர்த்து நின்று, வீழ்ந்த பட்டான் என்பதை குறிக்க, வீரனின் இடுப்பில் அம்பு முன்னிருந்து பாய்ந்தது போல், புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நடுகல், பலகை கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது, முதல் நடுகல்லில் உள்ளபடியே காணப்படுகிறது. ஆனால், இடுப்பிலுள்ள வாளை, வலது கையில் பிடித்திருப்பது போன்று உள்ளது. இரு நடுகற்களும் வீரக்கல் வகையைச் சார்ந்தது. அதன் அருகே, புது கற்கால கைக்கோடாரிகள், அவற்றை கூர்படுத்தும் சாணக்கல், இப்பகுதியில் கண்டறிவது இதுவே முதல்முறை. எருதுகட்டாம் பாறை பகுதியில், சிறு கற்களால், ஆணை குறிக்கும்படி, 6 அடி உயர நெடுங்கல், பெண்ணைக் குறிக்கும்படி, 5 அடி உயர நெடுங்கல் நடப்பட்டுள்ளது. இது, தம் முன்னோரில், முதன்மையான பாட்டன் நினைவாக நடப்பட்டுள்ளதால், பாட்டன் கல் என அழைக்கின்றனர். இது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச் சின்னம். இவ்வகை கல், ஏற்காட்டில் வேறு எங்கும் இல்லை என, வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar