பதிவு செய்த நாள்
26
ஆக
2018
08:08
திருப்பூர்; திருமலை திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம், திருப்பூரில் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.திருப்பூர் ரேவதி நிட்டர்ஸ், ஸ்ரீ லிங்கா சிட்பண்ட்ஸ், சக்தி ஜூவல்லரி மற்றும் திருப்பூர் மகா விஷ்ணு சேவா சங்கம் சார்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ நிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று திருப்பூரில் நடந்தது. திருமுருகன்பூண்டி ரிங்ரோடு, கன்டெய்னர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில், மாலை, 6:15 மணிக்கு திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. முளைப்பாலிகை, ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மாங்கல்ய பூஜையும், மகா வேள்வியும் நடைபெற்றது. இரவு, 7:20 மணிக்கு, ஸ்ரீநிவாச பெருமாளிடம் இருந்த, திருமாங்கல்யங்களை பெற்று, தாயார்களுக்கு அணிவிக்கப்பட்டு, வேதமந்திரம் முழங்க, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.விழாவில், முத்துக்குமார், சக்தி கோபால், டாக்டர் தீபா- தனபால் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.