பதிவு செய்த நாள்
26
ஆக
2018
08:08
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஆவணி அவிட்டம் மற்றும் சவுண்டம்மன் கோவில் திருவிழா நடந்தது. குமாரபாளையத்தில், ஆவணி அவிட்டம் நாளையொட்டி, சேலம் பிரதான சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்களில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மக்கள் பூணூல் அணிந்து கொண்டனர். பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதே போல் காவேரி நகர், சடையம்பாளையம் பகுதியிலும், சவுண்டம்மன் திருவிழா நடந்தது. இதில் சக்தி அழைப்பு வைபவத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் பவனி வர, வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறு, அம்மனை அழைத்து வந்தனர். பல்வேறு வீதிகளின் வழியாக நடைபெற்ற இந்த சக்தி அழைப்பு வைபவம், கோவில் வளாகத்தில் நிறைவு பெற்று, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.