திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2018 10:08
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் நான்குமாட வீதிகளை 16 முறை வலம் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்து, 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அம்பாள் பெரியநாயகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, முருகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 5:30 மணி முதல் பக்தர்கள் கோவிலின் மலை அடிவாரத்தை வலம் வந்து சுவாமியை வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.